Wednesday, March 15, 2017

பெண்களோட மனச ஆண்டவனாலும் கூட....


ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு..... தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள்....

அங்கே இருந்து கீழே பார்த்ததும்
அவளுக்கு பயம். ...

அப்புறம் குழந்தைகள் கவலை வேறு.....

இருந்தாலும் புருசன் 😡மீது செம கோபம்.

தற்கொலை செய்யாமல் அப்படியே அமர்ந்து விட்டாள்.

ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முணு முணுத்தது.....

இரண்டு நாளாக அவள்
அங்கேயே அமர்ந்திருந்திருந்தாள்.

சிவன், பிரம்மா, விஷ்ணு
மூவருக்கும் ஒரே குழப்பம்......
அவள் யாரை நினைத்து
தவம் செய்கிறாள் என....

குழப்பத்தை தீர்த்து கொள்ள
மூவரும் பூலோகம் வருகிறார்கள்.

அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.

நான் போய் அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லிக்கிட்டு கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி, அவள் கேட்கும்
வரங்களை கொடுங்கள் என்றார்.

இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற.... அதை ஆமோதிக்கிறார்கள்.

நாரதரும் அவள் அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.

அவள் மலையிலிருந்து கீழே
விழும் போது சொன்னாள்....






























"எந்த கம்மணாட்டி.. பரதேசி... பயடா... என்னை எட்டி உதைச்சது"😳😳😳

அட்டெ டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப்!!!!😇😇

இதனால நாம சொல்லுறது என்னன்னா....

"பெண்களோட மனசுல உள்ளத ஆண்டவனாலும் கூட....
. தெரிஞ்சிக்க முடியாது"😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬
so ஆண்டவணும் சரி, ஆண்களும் சரி உஷாரா தான் இருக்கனும்.

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive